செய்திகள் :

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

post image

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார்.

நிமிஷா பிரியா தரப்பில் வாதாடும் வழக்குரைஞர் சுபாஷ் சந்திரன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருப்பதாவது: “கொல்லப்பட்ட நபரின் சகோதரர் தெரிவித்திருக்கும் விஷயங்களையெல்லாம் நாங்கள் பின்னடைவாகக் கருதவில்லை. இவையனைத்தும், இந்த செயல்முறையில் நடைபெறும் விஷயங்கள்தான். கொல்லப்பட்ட நபரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாங்கள் சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறோம்.

செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) நிமிஷாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நல்ல மனிதர்கள் பலரும் அவரைக் காப்பாற்ற முன்வந்துள்ளனர். அதற்காகச் செயல்பட்டும் வருகின்றனர்.

நிமிஷாவைக் காப்பாற்ற ‘சர்வதேச செயல் குழுவில்’ முக்கியமாக உயர்நிலையில் 19 உறுப்பினர்களும் பல்வேறு துறைசார் 300 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும், இவ்விவகாரத்தில் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் மட்டுமில்லாது, செல்வாக்குமிக்க தொழிலதிபர்களான எம். ஏ. யூசுஃப் அலி(லூலூ குழுமத் தலைவர்), போபி செம்மனூர் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து காப்பாற்ற முன்வந்துள்ளனர்” என்றார்.

there are a good lot of people working to spare the Kerala nurse from death row

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க