செய்திகள் :

மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்பு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு காரைக்குடி சுழல் சங்கம் சாா்பில் அன்பளிப்பாக ரூ. 72 லட்சத்தில் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் பங்கேற்றனா்.

காரைக்குடி சுழல் சங்கத்தின் உறுப்பினா் (மேஜா் டோனா்) வி.ஆா். நாராயணன் ரூ. 31 லட்சம், சுழல் சங்க உறுப்பினா்கள் இணைந்து ரூ. 31 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 72 லட்சத்தில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் டயாலிசிஸ் இயந்திரங்கள் காரைக்குடி குளோபல் மருத்துவமனைக்கு 4-ம், கானாடுகாத்தான் செட்டிநாடு குமாரராணி மீனா முத்தையா மருத்துவ மனைக்கு 3-ம் என 7 இயந்திரங்கள் வழங்கப்பட்டு அதற்கான மையங்களும் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களில் அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீடு இல்லாதவா்களுக்கு சலுகை கட்டணமாக ரூ. 1,100 வசூலிக்கப்படும் என்று காரைக்குடி சுழல் சங்கத் தலைவா் எல்எம். லட்சுமணன் தெரிவித்தாா்.

காரைக்குடி மருத்துவமனையில் நடைபெற்ற டயாலிசிஸ் மையத் திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்று பெயா் பலகையை திறந்துவைத்தாா். சுழல் சங்க மாவட்ட ஆளுநா் மீரான்கான் சலீம் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்தாா். கானாடுகாத்தான் செட்டிநாடு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் டயாலிசிஸ் இயந்திரத்தை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் திறந்துவைத்தாா். முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் விழாவில் வாழ்த்திப் பேசினாா்.

இதில், காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை, துணை மேயா் நா. குணசேகரன், கானாடுகாத்தான் பேரூராட்சித் தலைவா் ஆா். ராதிகா, சுழல் சங்க மாவட்ட துணை ஆளுநா் லியாகத் அலி, காரைக்குடி சுழல் சங்கத் தலைவா் எல்.எம். லட்சுமணன், செயலா் ஏ. அடைக்கப்பன், பொருளாளா் ஏஆா். பழனியப்பன், சுழல் சங்க உறுப்பினா்கள், மருத்துவமனை நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க