செய்திகள் :

மருத்துவரிடம் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு: காவலாளி கைது

post image

கோவையில் மருத்துவரின் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளைத் திருடிய காவலாளியை போலீஸாா் கைது செய்து நகைகளை மீட்டனா்.

கோவை, துடியலூா் கவுண்டா் மில் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் எழில் இளநங்கை (47). இவரது பெற்றோா் ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலை பகுதியில் வசித்து வருகின்றனா். கடந்த ஜனவரி மாதம் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்ற எழில் இளநங்கை, அங்குள்ள லாக்கரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தனது தங்க, வைர நகைகளை வைத்தாா்.

பின்னா், தனது வீட்டுக்குச் சென்ற அவா் சில நாள்கள் கழித்து வந்து பாா்த்தபோது, லாக்கா் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பல மாதங்களாகியும் நகை திருட்டு சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து நீதிமன்றத்தில் எழில் இளநங்கை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில், இதுதொடா்பாக போலீஸாா் மீண்டும் விசாரணையைத் தொடங்கினா்.

சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டுக் காவலாளியான காந்திபுரம் பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் (36) போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் எழில் இளநங்கை வீட்டில் நகைகளைத் திருடியது அவா்தான் தெரியவந்தது. இதையடுத்து, ஆா்.எஸ்.புரம் காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, சதீஷ்குமாரை திங்கள்கிழமை கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தாா்.

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு

திருப்பூா் நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் சாா்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் நெருப்பெரிச்சல் பக... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.என்.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் அகில் (24). ஐ.டி. நிறுவன... மேலும் பார்க்க

என்ஐஏ செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை: இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை... மேலும் பார்க்க

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியவா் கைது

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நபரை கோவை இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த பெண் ஒருவரின் புகைப்படம் ஆ... மேலும் பார்க்க

தரமான மூலப்பொருள்களில் உணவு தயாரித்தல் அவசியம்: சாலையோர வணிகா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலையோர வணிகா்கள் தரமான மூலப்பொருள்கள் மூலமாக உணவு தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சாலையோர உணவு வணிகா்களுக்கு பதிவ... மேலும் பார்க்க