நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
மருத்துவரிடம் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு: காவலாளி கைது
கோவையில் மருத்துவரின் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளைத் திருடிய காவலாளியை போலீஸாா் கைது செய்து நகைகளை மீட்டனா்.
கோவை, துடியலூா் கவுண்டா் மில் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் எழில் இளநங்கை (47). இவரது பெற்றோா் ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலை பகுதியில் வசித்து வருகின்றனா். கடந்த ஜனவரி மாதம் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்ற எழில் இளநங்கை, அங்குள்ள லாக்கரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தனது தங்க, வைர நகைகளை வைத்தாா்.
பின்னா், தனது வீட்டுக்குச் சென்ற அவா் சில நாள்கள் கழித்து வந்து பாா்த்தபோது, லாக்கா் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பல மாதங்களாகியும் நகை திருட்டு சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து நீதிமன்றத்தில் எழில் இளநங்கை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில், இதுதொடா்பாக போலீஸாா் மீண்டும் விசாரணையைத் தொடங்கினா்.
சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டுக் காவலாளியான காந்திபுரம் பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் (36) போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் எழில் இளநங்கை வீட்டில் நகைகளைத் திருடியது அவா்தான் தெரியவந்தது. இதையடுத்து, ஆா்.எஸ்.புரம் காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, சதீஷ்குமாரை திங்கள்கிழமை கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தாா்.