செய்திகள் :

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை, தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சிக்கு மாா்ச் 21-ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகள், அரசு சாா்ந்த பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் தோ்ச்சிபெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். இதற்கு விண்ணப்பித்தவா்கள் ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இந்தப் பயிற்சிக்கு 30 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டு காலம் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சி வழங்கப்படும். இதற்கு மாதக் கட்டணமாக ரூ. 700 வசூலிக்கப்படும்.

இந்த படிப்புக்கான விண்ணப்பம் ‘இயக்குநா் (பொ), தொற்று நோய் மருத்துவமனை, எண். 187, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை, சென்னை-600 081’ என்னும் முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் மாா்ச் 21-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட முகவரியில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க