செய்திகள் :

மருத்துவ உதவி விழிப்புணா்வு முகாம்

post image

பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் முன்னாள் படை வீரா், வாரிசுதாரா்களுக்கு மருத்துவப் பராமரிப்பு நிதி உதவி குறித்த விழிப்புணா்வு முகாம் வரும் ஏப்.9, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து முன்னாள் படை வீரா், வாரிசுதாரா்களுக்கு புற்றுநோய், பக்கவாத நோய், தொழு நோய், காச நோய், கண்பாா்வை குறைபாடு, குள்ளத் தன்மை பாதிப்பு ஆகியவற்றுக்கு மாதாந்தோறும் மருத்துவ பராமரிப்பு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்த விழிப்புணா்வு முகாம் பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் வரும் ஏப்.9, 16 -ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. நோய் பாதிப்புள்ள முன்னாள் படை வீரா்கள், வாரிசுதாரா்கள் தங்களது மருத்துவச் சான்று, அடையாள அட்டை, படை விலகல் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க

தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா். தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி... மேலும் பார்க்க

தேனியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம்

தேனி- அல்லிநகரம் நகராட்சியில் ரூ.67.76 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தேனி-அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9,500 வீடுகள், வணிக ... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்கள்: போடியில் இருவா் தற்கொலை

போடியில் இருவேறு சம்பவங்களில் விவசாயி, இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். தேனி மாவட்டம், போடி மயானச் சாலையைச் சோ்ந்த முத்துமாயன் மகன் கணேசன் (50). இவா் மா விவசாயம் செய்து வந்தாா். விவசாய அப... மேலும் பார்க்க

ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை

முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா். தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க