செய்திகள் :

மருந்துப் பொருள்களுக்கு விரைவில் வரி உயர்வு: டிரம்ப்

post image

மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மருந்துப் பொருட்களின் உற்பத்தி அதிக அளவு இல்லையென்றாலும், மருத்துவத் துறை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

இதனால், மற்ற நாடுகளின் மருத்துவ இறக்குமதிகளுக்கு விரைவில் புதிய வரியை டிரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கான நிதி திரட்டும் விழாவின் இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிபர் டிரம்ப்,

''புதிய வரி விதிப்பின் மூலம் உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றி. விரைவில் மருந்துப் பொருட்களுக்கான வரி உயர்வை எதிர்பார்க்கலாம்.

மருந்துப் பொருட்களின் விற்பனை சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், இந்த விலையேற்றத்தால் உலக நாடுகள் நம்மிடம் வரவேண்டிய நிலை ஏற்படும்'' எனக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மருந்து உற்பத்தி கணிசமாக இல்லாதது குறித்து நீண்ட காலமாக அமெரிக்கா வருந்திவரும் நிலையில், நாட்டிற்குள் அதிக மருத்துவத் துறை உற்பத்திகளைக் கொண்டுவர வரிகளை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல், தாமிரம் மற்றும் மின்னணு சில்லுகள் (சிப்) உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில், விரைவில் மருந்து பொருள்களுக்கும் புதிய வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிப்லா, லூபின், சன்பார்மா, ஸைடஸ் போன்றவை அமெரிக்காவுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்து வரும் முக்கிய (இந்தியாவில் செயல்படும்) நிறுவனங்களாக உள்ளன.

மருந்து பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்காததால் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சீனாவுக்குத்தான் இழப்பு: 84% வரி விதிப்பு குறித்து அமெரிக்கா கருத்து!

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க