'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
மருமகளிடம் கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார் - எங்கே நடந்தது இந்த கொடுமை?
பெண்ணிடம் வரதட்சணையாக அவரது கிட்னியை கேட்ட மாமியார் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தீப்தி என்ற பெண் பீகாரில் உள்ள முசாபர்பூரில் 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆகி சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் அனைத்தும் சுமுகமாக இருந்த நிலையில், தனது கணவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் அந்த பெண்ணிடம் மாமியார் அவரின் கிட்னியே கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் கூறுகையில் ”என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். பெற்றோர் வீட்டில் இருந்து பைக் மற்றும் பணம் கேட்டு வர சொன்னார்கள். அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்றதும் என்னிடம் சிறுநீரகத்தை கேட்டு என்னை கட்டாயப்படுத்த தொடங்கிவிட்டனர்.
நான் என் சிறுநீரகத்தை தானம் செய்ய மறுத்ததை அடுத்து என்னை வீட்டை விட்டு, மாமியார் வெளியேற்றி விட்டார்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது.
தீப்தி தனது கணவரிடமிருந்து விவகாரத்து கேட்டும் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் உட்பட அவரது மாமியார் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.