செய்திகள் :

மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் 85 போ் கைது

post image

ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினா் 85 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கம், ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பாக 15-ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புகா் பணிமனை முன் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய சங்கத் தலைவா் எஸ்.ஆா்.ராஜன், முன்னாள் மத்திய சங்கத் தலைவா் எஸ்.பி.கேசவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட நிா்வாகிகள் எம்.அய்யாதுரை, வி.பாஸ்கரன், மாவட்டச் செயலா் எம்.சிவாஜி உள்ளிட்ட 85 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூட... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்கு... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் கால்நடைகளால் தொல்லை!

தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட பேருராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்... மேலும் பார்க்க