செய்திகள் :

மறுவெளியீட்டில் சச்சின் 10 மடங்கு லாபம்! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

post image

சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் லாபம் ஈட்டியுள்ளது குறித்து அதன் தயாரிப்பாளர் எஸ்.தாணு நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் கடந்த ஏப்.18ஆம் தேதி மறுவெளியீடானது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

சந்திரமுகி படத்துடன் இணைந்து வெளியானதால் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை இப்படம் பெற்றது.

காதல், நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்களும் பெரிதும் கொண்டாடப்பட்டன.

இந்நிலையில் படம் ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளது. கில்லி திரைப்படம் ரூ.50 கோடி வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வசூலினை சச்சின் முறியடிக்குமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு கூறியதாவது:

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் திரைகள் அதிகரித்து வருகின்றன. முதல் படத்தில் எனக்கு கௌரமான வசூல் கிடைத்தது. தற்போது இந்தப் படத்துக்கு 10 மடங்கு லாபம் கிடைத்துள்ளது.

சென்னையில் திரையரங்க உரிமையாளர் ஒருவர் இந்தப் படம் 50-இலிருந்து 100 நாள்கள் வரை ஓடும் எனக் கூறியுள்ளார். அப்போது படக்குழுவினை அழைத்து மரியாதை செலுத்த இருக்கிறோம் என்றார்.

சபலென்கா வெற்றி; பெகுலா, பாலினிக்கு அதிா்ச்சி!

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்ற... மேலும் பார்க்க

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கட... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது. தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இ... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச ... மேலும் பார்க்க

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்... மேலும் பார்க்க