செய்திகள் :

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!

post image

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உயிரிழந்த சம்பவம் விபத்து என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியாத விதத்தில் அன்னாரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் தொடர்ந்து அதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம்பிடித்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க். இந்த நிலையில், கடந்த வாரம் சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ஸுபீன் கர்க்(52), செப்.19-இல் அங்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், குவாஹாட்டி அருகேயுள்ள கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மரண வழக்கை விசாரிக்க உருவக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமை வகிப்பார் என்றும், 10 அதிகாரிகள் கொண்ட இந்த குழு விரிவன விசாரணை நடத்தி அறிக்கையை அஸ்ஸாம் அரசிடம் விரைவில் தாக்கல் செய்யும் என்று அம்மநில முதல்வர் ஹிமந்த பிச்வ சர்மா இன்று(செப். 24) தெரிவித்தார்.

SIT headed by IPS MP Gupta has been formed to look into the circumstances leading to the unfortunate demise of singer Zubeen Garg

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபா் கைது

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 6 நக்சல்கள் சரண்!

மகாராஷ்டிரத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த உத்தேச தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.10-ஆம் வகுப்புக்கான ப... மேலும் பார்க்க

மறைந்த எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி சொன்ன விஷயம்..!

கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா இன்று (செப். 24) காலமானார். அன்னாரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த ஞானம் வாய்ந... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்... மேலும் பார்க்க

நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சிறுமி என்பதைப் பற்றி பார்க்கலாம்..தில்லியில் உள்ள விக்ஞான் பவனில்... மேலும் பார்க்க