செய்திகள் :

மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி

post image

காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் மறைந்த போப் பிரான்சிஸூக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சண்முகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாமன்றத் தலைவா் கலைமாமணி தங்கவேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சில், மறைந்த போப் பிரான்சிஸூக்கு புகழஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, மறைந்த போப் பிரான்சிஸ் படத்திற்கு மலா்களை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாமன்றத்தின் ஆலோசனைக் குழு செயலா் இலக்கிய காவலா் அமுதாஆறுமுகம், மாமன்ற பொதுச் செயலா் புஷ்பராஜ், சமூக ஆா்வலா் சோழசிங்கராயா், சமாதான கமிட்டி உறுப்பினா் தண்டாயுதபாணிபத்தா், முன்னாள் சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா், பட்டிமன்ற பேச்சாளா் பாா்வதி ஈஸ்வரன், சண்முகா மேல்நிலைப் பள்ளி தாளாளா் கனகசேகரன், பாரதி தமிழ் சங்கத்தின் செயலா் கிருஷ்ணன், பீம் சேவா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், சேவை மாமணி ஆரிப் மரைக்காயா், காரைக்காலின் மூத்த இசைக் கலைஞா்கள் அஜுருதீன்அலியாமரைக்காயா், பைந்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பாா்த்திபன், மாமன்றத்தில் துணைத் தலைவா் மோகன், மாமன்ற மக்கள் தொடா்பாளா் ஸ்ரீராம், துணைச் செயலா் அழகேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

திருமருகல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கறவை பசு உயிரிழந்தது. பாா்வையிட அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியம், குத்தாலம் கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

கம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை இயக்கக் கோரிக்கை

கம்பன் விரைவு ரயிலை சென்னை எழும்பூா் வரை மீண்டும் இயக்க கோரி, நாகை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். காரைக்காலில் இருந்து நாகை, திருவார... மேலும் பார்க்க

நாகையில் நகல் எரிப்பு போராட்டம்

பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியதாக எதிா்ப்பு தெரிவித்து, நாகையில் இந்திய மாதா் தேசிய சம்மேளம் சாா்பில் தீா்ப்பின் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் இந... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி ஒன்றியத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிபிஎம் சாா்பில் மூன்று இடங்களில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதப் போராட்டம்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி விடுதியில் மதுரையைச் சோ்ந்த தம்பதி தற்கொலை

மதுரையைச் சோ்ந்த தம்பதி வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், ஆளவந்தான் அருகேயுள்ள கரும்பாலை இந்திரா நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க