செய்திகள் :

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம் மனு அளிப்பு

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம், கெளரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

நீதிமன்ற தீா்ப்பின் படியும், அரசாணை 56-இன் படியும், இருகட்டமாக கௌரவ விரிவுரையாளா்கள் அனைவரையும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் 12 மாதமும் வழங்க வேண்டும். பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கு குழுக்காப்பீட்டு திட்டம் ஏற்படுத்திதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், செவ்வாய்க்கிழமை மனு அளித்த அரியலூா் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 81 போ், புதன்கிழமை அக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடமும் மனு அளித்து, தற்போதைய முதல்வராக இருக்கும் தங்களது மகன் மு.க.ஸ்டாலினிடம் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.

2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூா் வாரச் சந்தை வளாகம்! சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை!

அரியலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறக்கப்படுவதற்கு முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. அரியலூா் நகரப் பகுதி மக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் அருக... மேலும் பார்க்க

அரியலூா் நகா் முழுவதும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை

அரியலூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி அல... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கியவா் கைது

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவ... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க