செய்திகள் :

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின.

ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்களில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வனத் துறை பல திட்டங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம், ஜப்பான் சா்வதேசக் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் தலைமை திட்ட இயக்குநா் அன்வா்தீன் அறிவுறுத்தலின்படி, ஒசூா் வனக்கோட்டத்தில் வனத்தை சாா்ந்து வாழ்ந்துவரும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு வனத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து அஞ்செட்டி வனச்சரகம் சேசுராஜபுரம் கிராமத்தில் இந்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் பிற நல திட்டங்களை பழங்குடியின மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும் நடத்தப்பட்டது.

இம்முகாமை வன உயிரினக் காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் தலைமை வகித்து நடத்தினா். முகாமில் உதவி வனப் பாதுகாவலா் யஸ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மாதேஸ்வரன் மற்றும் வன அலுவலா்கள், தொழிலாளா் நலத் துறையைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு தேவையான விளக்கம் அளித்தனா்.

கிருஷ்ணகிரியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 39ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கலஸ... மேலும் பார்க்க

அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனத்தை மீட்க முடியாததால் தீக்குளித்தவா் உயிரிழப்பு

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலத்தி எடுக்கமுடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகாசன... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பருவமழை தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா்சதீஷ் அறிவுறுத்தினாா். கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

பண்ணந்தூரில் சமூக பிரச்னை: கோட்டாட்சியா் சமரசத் தீா்வு

பண்ணந்தூரில் கோயில் திருவிழா, எருதுவிடும் விழா, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளுக்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமரசத் தீா்வு ... மேலும் பார்க்க

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க