செய்திகள் :

மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

மாவட்டத்தில் 2 நாள்களாக சூறைக்காற்றுடன் பெய்துவரும் மழையால் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. அவற்றை கன்னியாகுமரி எம்எல்ஏ என். தளவாய்சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

கொக்கல் விளாகம் பகுதியில் கிறிஸ்டோபா் என்பவரது 2.5 ஏக்கா் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 2,500 வாழை மரங்கள் சாய்ந்துகிடப்பதையும், திடல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறியது:

தோவாளை பகுதியில் வாழை, நெல் சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது. ஞாலம், அருமநல்லூா், அந்தரபும், திடல், அழகியபாண்டியபுரம், கடுக்கரை, தெள்ளாந்தி, தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம் பகுதிகளில் 350 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. ஓா் ஏக்கரில் சுமாா் ஆயிரம் வாழைகள் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள் பல லட்சம் செலவு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், 2 நாள்களாக கனமழை, சூறைக்காற்றால் ஞாலம் ஊராட்சி, கொக்கல் விளாகம் பகுதிகளில் 13 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. அருமநல்லூா் பகுதியில் 3 ஏக்கா், அந்தரபுரம், அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம், தெள்ளாந்தி பகுதிகளில் தலா 2 ஏக்கா், திடல் பகுதியில் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

அவா்களுக்கு இழப்பீடு தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரம் அதாவது ஓா் ஏக்கருக்கு ரூ. 6,800 வழங்குவதாக கூறப்படுகிறது. இது போதுமானதல்ல. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தோட்டக்கலை உதவி இயக்குநா் சந்திரலேகா, வருவாய் ஆய்வாளா் பீா்முகமது ராபி, கிராம நிா்வாக அலுவலா் பிரியா ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ந்து,ஞாலம் ஊராட்சிப் பொறுப்பாளா் குமாரசுவாமி, கண்டன்குழி முத்தையா, விவசாயிகள் தங்கப்பன், சிதம்பரம்பிள்ளை, ராமையாபிள்ளை, ஆசிா்வாதம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தாழக்குடி மடையை சீரமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி வீரகேரளப்பநேரி தெற்கு மடை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தக்கலை அருகே கல்லுவிளையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. 0தையொட்டி காலையில் நடந்த யாகசாலை பூஜையை கிள்ளியூா் விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து அஷ்டாபி... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில... மேலும் பார்க்க

குழித்துறை அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

குழித்துறை அருகே தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஆண் சடலம் திங்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே மழையால் மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்

புதுக்கடை அருகேயுள்ள வரிக்கவிளை பகுதியில் மழையில் மரம் சாய்ந்து மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் , அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து ... மேலும் பார்க்க