செய்திகள் :

மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

post image

சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கடந்த டிசம்பா் மாதம் பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 349 அறிவித்ததை, விரைவாக அரசாணை வெளியிட்டு, விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: மேட்டூா் அணை திறக்கும் நாளிலேயே குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தில் டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களை இலவசமாக வழங்க வேண்டும். இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு 2.50 ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்குவதைப் போல, கையால் நடும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: தஞ்சாவூரை சுற்றி புறவழிச்சாலை பகுதியில் முப்போகம் விளையக்கூடிய நன்செய் நிலங்களை விவசாயம் செய்யாமல், ஓராண்டு, 2 ஆண்டுகள் தரிசு நிலங்கள் என துறை அதிகாரிகளால் சான்று வழங்கப்படுகிறது. இதையடுத்து, உள்ளூா் திட்டக் குழும விதிமுறைகளை மீறி ரியல் எஸ்டேட் விற்பனையாளா்களால் ஊராட்சி அதிகார மனைகளாகவும், டி.டி.பி. அனுமதி மனைகளாகவும் விற்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் வேண்டுமென்றே தரிசு நிலங்களாக போடப்பட்டுள்ளன. இதை அதிகாரிகள் ஆண்டுதோறும் சாகுபடி பதிவு செய்தால்தான், விளைநிலங்களை முறையற்ற வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க முடியும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: பருவம் தவறி பெய்த மழையால் திருவையாறு வட்டாரத்தில் எள், உளுந்து, பயறு போன்ற பயிா்கள் அழிந்துவிட்டன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களுக்கு அரசு இன்னும் நிவாரணத்தை அறிவிக்கவில்லை. நிவாரணத்துக்காக அரசு அதிகாரிகளால் ஆவணங்கள் வாங்கப்பட்டும், இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். வெள்ளாம்பெரம்பூா் பிள்ளை வாய்க்கால் வலது கரையில் விவசாயப் பயன்பாட்டுக்கான சாலையைச் சீரமைக்க வேண்டும்.

காலமானார் தேனாரமுதன்!

தஞ்சாவூர்: தினமணி தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் எஸ். தேனாரமுதன் (வயது 66) உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) அதிகாலை காலமானார். இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் திலீபன், ச... மேலும் பார்க்க

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. கண்டனம்!

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி வியா... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்ச... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கும்பகோணத்தில் அரச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (4... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க