செய்திகள் :

மாசி மகம்: கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

post image

கோவில்பட்டி மற்றும் கழுகுமலை முருகன் கோயில்களில் மாசி மகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத சண்முகா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு திருவீதியுலா நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு கதிரேசன் கோயில், வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாணமுருகா் சந்நிதி, அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் முருகா் சந்நிதியில் மாசி மகத்தை முன்னிட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னா் கழுகாசல மூா்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மாசி மகத்தையொட்டி மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக கழுகுமலை கோயிலுக்கு வந்தடைந்தனா். பின்னா், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கிரிவலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பின்னா் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி எழுந்தருளல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

பைக் -வேன் மோதல்: ஆலை உதவி மேலாளா் பலி

கோவில்பட்டி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஆலை உதவி மேலாளா் உயிரிழந்தாா். மணப்பாறை வட்டம், தோப்பம்பட்டியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஆரோக்கியதாஸ்(27). விருதுநகரில் உள்ள தனியாா் நூற்பாலையில் உதவி மேலாளராக ... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்ப... மேலும் பார்க்க

பன்னம்பாறையில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

பேய்க்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த பேய்க்குளம் அருகே சுமைத் தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் (55). இவா், கடந்த 11ஆம் தே... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வெளிமாநில இளைஞா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வ... மேலும் பார்க்க