அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா?
மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
தேனியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த பெட்ரோல் நிரப்பும் மைய ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே உள்ள அன்னஞ்சியைச் சோ்ந்த மதுரைவீரன் மகன் மணிக்குமாா் (30). இவா் பழனிசெட்டிபட்டி, தந்தை பெரியாா் தெருவில் குடியிருந்து வந்தாா்.
தேனியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் மையம் ஒன்றில் வேலை செய்து வந்த மணிக்குமாா், தேனி, சுப்பன்தெருவில் உள்ள தனது நண்பா் வீட்டுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்காகச் சென்றாா்.
அங்கு வீட்டின் 3-ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த மணிக்குமாா், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.