செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: மணிமங்கலம் பகுதியில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி பலியானாா்.

மணிமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த பாலகுமரன் மனைவி வித்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆருத்ரா என்ற மகள் இருந்தாா். இந்த நிலையில், வித்யா திங்கள்கிழமை தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது மாடியில் துணிகளை காயவைப்பதற்காக சிறுமி ஆருத்ராவுடன் மாடிக்குச் சென்று குழந்தையை விட்டுவிட்டு துணிகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாடிப் படிக்கட்டின் பக்கவாட்டு இரும்பு கம்பிகளுக்கிடையே சென்ற ஆருத்ரா தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிகப் பயணம்!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வயது முதிர்ந்த முதியவர்களை ராமேஸ்வரம் காசி கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவி... மேலும் பார்க்க

தென்னேரி கிராமத்தில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தென்னேரி கிராமத்தில் அமைந்துள்ள தெப்பக் குளத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி... மேலும் பார்க்க

மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து திமுக பொதுக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு

ஸ்ரீபெரும்புதூா்: மேட்டுப்பாளையம் கிராமத்தில் செல்லாத்தம்மன் கோயில் குளம் மற்றும் ஓடகாட்டு ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் கட்டியுள்ள தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை ... மேலும் பார்க்க

வங்கிக் கடன்களை முறையாக செலுத்தி முன்னேற வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வங்கியில் வாங்கிய கடன்களை முறையாக செலுத்தினால் எளிதாக முன்னேறலாம் என இந்தியன் வங்கியின் மண்டல துணை மேலாளா் என்.சங்கா் பேசினாா். காஞ்சிபுரம் இந்தியன் வ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 557 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 557 மனுக்கள் அளிக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட... மேலும் பார்க்க