செய்திகள் :

மாட்டுக்கறி சாப்பிட தடைவிதித்த வங்கி ரீஜினல் மேலாளர்; `பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்திய அதிகாரிகள்!

post image

கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கப்படுவது வழக்கம். அந்த கேண்டீனில் மாட்டுக்கறி சமைக்கக் கூடாது எனவும், அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது எனவும் புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ரீஜினல் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் 'பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்தினர். அலுவலக கேண்டீனில் மாட்டுக்கறி சமைத்து அதிகாரிகள் சேர்ந்து சாப்பிட்டனர். பீப் பெஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் பீகாரைச் சேர்ந்தவர் எனவும், அவர், அதிகாரிகளை மதிக்காமல் செயல்படுவதாகவும் ஏற்கனவே புகார் இருந்துவந்ததது. அதற்கிடையே மாட்டுக்கறிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதிகாரிகளின் 'பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்தப்பட்டது.

மாட்டுக்கறிக்கு தடைவிதித்த மேலாளருக்கு எதிராக பீப் பெஸ்ட் போராட்டம்

இதுபற்றி பேங்க் எம்பிளாயீஸ் பெடரேசன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அனில் கூறுகையில், "அரசியலமைப்பின் வழிகாட்டுதல்படிதான் இந்த வங்கி இயங்குகிறது. எந்த உணவை தேர்வு செய்ய வேண்டும் என்பது தனி நபரின் உரிமையாகும். ஒவ்வொருவருக்கும் அவருடைய உணவை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. இங்குள்ள கேண்டீனில் குறிப்பிட்ட நாட்களில் மாட்டுக்கறி பரிமாறப்பட்டு வந்தது. இனி மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என கேண்டீன் ஊழியர்களிடம் மேலாளர் கூறியுள்ளார். யாரையும் மாட்டுக்கறி சாப்பிட நாங்கள் நிர்பந்திக்கவில்லை. ஆனால், இது எங்களுடைய போராட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

பீப் பெஸ்ட் போராட்டம்

மத்திய அரசின் அஜண்டாவை நிறைவேற்றும் வகையில் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என ரீஜினல் மேலாளர் தெரிவித்துள்ளதாகவும். உணவு உண்ணும் உரிமையை பறிக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். என்ன உடை அணியவேண்டும், என்ன உணவு உண்ன வேண்டும், எதைப்பற்றி சிந்திக்கவேண்டும் என முடிவு செய்யவேண்டியது உயர் அதிகாரிகள் அல்ல என கே.டி.ஜலீல் எம்.எல்.ஏ தெரிவித்தார். 

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம... மேலும் பார்க்க

NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்க... மேலும் பார்க்க

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க