மகாராஜா இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் திரைக்கதையாளர்!
மாட்டுவண்டி மீது அரசுப் பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
காவேரிப்பட்டணம் அருகே மாட்டுவண்டி மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள செட்டிப்பள்ளியைச் சேரந்த நாகராஜ் (55) தொழிலாளி. இவா், தருமபுரி - காவேரிப்பட்டணம் சாலையில் மாட்டுவண்டியில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மாட்டுவண்டியின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நாகராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், உயா்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.