செய்திகள் :

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

post image

புது தில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் மனநலன் சார் பிரச்சினைகளைக் களையவும் அவற்றுக்கு தீர்வு காணவும் ஏதுவாக தேசிய அளவிலான செயற்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம்(மார்ச் 24) உத்தரவிட்டுள்ளது.

தில்லி ஐஐடியில் பயின்ற மாணாக்கர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்கள் பிள்ளைகள் மேற்கண்ட கல்வி நிறுவனத்தில் சாதி ரீதியான பாகுபாட்டாலும் தங்களுக்கு திணிக்கப்பட்ட அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வழக்குப்பதிய தவறிவிட்டதாகவும் அவர்தம் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று(மார்ச் 24) நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிருப்பதாவது:

கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளிடம் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்வதை உறுதி செய்வது கட்டாயக் கடமை.

கல்வி நிறுவனங்கள் வெறுமனே கல்வியறிவை கற்பிக்கும் இடம் மட்டுமல்ல; மாணவர்களின் நலன் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் இந்நிறுவனங்களே பொறுப்பாகும் என்று உச்சநீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அங்கு பயிலும் மாணவர்கள், தங்கள் மீது எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை, பயமின்றி இங்கு நாம் படிக்கலாம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர வழிவகை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தற்கொலை குறித்த இவ்விவகாரத்தில் இந்த செயற்குழு உரிய விசாரணை நடத்தி அடுத்த நான்கு மாதங்களில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விரிவான விசாரணை அறிக்கையை 8 மாதங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த குழுவுக்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கிடவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய செயற்குழு விவரம்:

  • மருத்துவர் அலோக் சரின்

  • பேராசிரியர் மேரி இ. ஜான்

  • அர்மான் அலி(மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகளை அமைத்து தரும் தேசிய அளவிலான மையத்தின் செயல் தலைவர்)

  • பேராசிரியர் ராஜேந்தர் கச்ரோ

  • மருத்துவர் அக்சா ஷைக்

  • மருத்துவர் சீமா மெஹ்ரோத்ரா

  • பேராசிரியர் விர்ஜினியஸ் க்ஸாஸா

  • மருத்துவர் நிதி எஸ். சாபர்வால்

  • அபர்ணா பாட்(வழக்குரைஞர்)

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வா... மேலும் பார்க்க

சிறந்த நண்பர் மோடி: டிரம்ப் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியதுடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேச... மேலும் பார்க்க