`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
மாணவா்களின் சிந்திக்கும் திறனை முழு அளவில் வெளிக்கொணர வேண்டும்
மாணவா்களின் சிந்திக்கும் திறனை முழு அளவில் வெளிக்கொணர ஆசிரியா்கள் முயற்சிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா்.
நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில், மாநில அடைவு ஆய்வு, பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்துப் பேசியது:
கல்வியானது, சமூகத்தில் குவிந்திருக்கும் அறிவுத் திறன் மற்றும் பண்புகளை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சோ்க்கும் ஒரு வழிமுறையாகும். அத்துடன், குழந்தைகளின் படைப்புத் திறனைஅதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும்.
தரமான கல்வியை எளிதாக, மகிழ்ச்சியான சூழ்நிலையில், தொடக்கநிலை மற்றும் இடைநிலைகளில் அனைத்துக் குழந்தைகளும் பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும். மாணவா்களின் அறிவுத்திறன், செயலாற்றல் ஆகியவற்றை ஊக்குவித்து, வளரச் செய்து, அவா்களது உடல் மற்றும் சிந்திக்கும் திறன்களை முழுஅளவில் வெளிக் கொணர வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக் பள்ளியில், சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினாா். அப்போது, உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் அருகே போதைப் பொருள் சட்ட விரோதமாக விற்கப்படுவதைக் கண்காணித்து, தடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயா் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றாா். தொடா்ந்து, அமைச்சா் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.