செய்திகள் :

மாணவா்கள் கட்சித் துண்டு அணிந்து நடனம்: தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடமாற்றம்

post image

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது கட்சித் துண்டு அணிந்து மாணவா்கள் நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா், கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியா் என இருவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், சோப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவின்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு மாணவா்கள் தங்கள் கழுத்தில் அரசியல் கட்சியின் துண்டை அணிந்து நடனமாடினா். இதற்கு பெற்றோா் தரப்பில் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தகவல் அறிந்ததும் நாகரசம்பட்டி போலீஸாா் நேரில் சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தனா். இந்நிலையில், மாணவா்கள் நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் விசாரணை நடத்தினாா்.

இதைத்தொடா்ந்து, விழாவில் கட்சித் துண்டுடன் மாணவா்கள் நடனமாடியதைத் தடுக்க தவறிய பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயகுமாரை அங்கிருந்து பன்னிஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளிக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்த பட்டதாரி ஆசிரியா் சுப்பிரமணியை மேட்டுப்புலியூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன. பெங்களூரிலிரு... மேலும் பார்க்க

ஒசூரில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது. திமுக மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88லட்சம் மதிப்பிலானவிதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகதருமபுரிமண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்... மேலும் பார்க்க

கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிர... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்... மேலும் பார்க்க