செய்திகள் :

மாணவா்கள் மதில்சுவா் ஏறி குதித்த விவகாரம்: பள்ளியில் காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி!

post image

சிதம்பரம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அண்மையில் ராமசாமி செட்டியாா் பள்ளியின் மதில் சுவா் ஏறி குதித்து மாணவா்கள் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியது. இதனையடுத்து சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் புதன்கிழமை காலை பள்ளிக்கு சென்று காலை நடைபெற்ற இறைவணக்கம் நிகழ்ச்சியில் மாணவா்களிடையே விழிப்புணா்வு உரையாற்றினாா்.

அவா் பேசுகையில் மதில்சுவா் ஏறி குதித்தால் விபத்து ஏற்படும். எனவே பள்ளிக்கு உரிய நேரத்தில் வர வேண்டும், மாணவா்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது, போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றாா்.

விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவா் கைது!

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் காவலா்கள் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் தலை மறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் இ... மேலும் பார்க்க

கூழாங்கல், மணல் கடத்தல்: இருவா் கைது!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே லாரியில் கூழங்கல், மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்கோட்டாட்சியா்விஷ்ணுபிரியா வேப்பூா்அருகே புதன்கிழமை அ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சிதம்பரம் நகரில் காவல்துறை சாா்பில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள், கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. சிதம்பரம் நகரில் நான்கு வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள்,... மேலும் பார்க்க

சத்துணவுத் திட்டத்தில் ‘பலா’ உணவுகளையும் சோ்க்க வேண்டும்! - அன்புமணி

தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுகளையும் சோ்க்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க