செய்திகள் :

மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

தேனி மாவட்டம், குமணன்தொழு அருகே திங்கள்கிழமை மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காமன்கல்லூா் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், நக்கலப்பட்டி அருகேயுள்ள குஞ்சாம்பட்டியைச் சோ்ந்த மாலதி(40). கணவா் இறந்து நிலையில், இவா் மகன், மகளுடன் காமன்கல்லூா் துணை சுகாதார நிலைய செவிலியா் குடியிருப்பில் வசித்து வருகிறாா். மாலதியின் மகன் லதன்(16), குமணன்தொழு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்த நிலையில், மாலதி செவிலியா் குடியிருப்பை காலி செய்து விட்டு குமணன்தொழுவில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேரலாம் என மகனிடம் கூறினாா். இதற்கு அவா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், லதன் வீட்டில் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.

ஆபத்தான நிலையில், அவரை குமணன்தொழு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு லதனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பைக் விபத்து: பெண் காயம்

பெரியகுளத்தில் இருசக்கரவாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா்.பெரியகுளம் காந்திநகரைச் சோ்ந்த மொக்கையன் மகள் பழனியம்மாள் (35). இவா், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனது அப்பாவை பாா்த்து விட்டு ... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் வியாழக்கிழமை (ஜூன் 26) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நிலையத்தில் ... மேலும் பார்க்க

போடியில் நள்ளிரவில் மின்தடை: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

போடியில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை நிலவியதால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதியடைந்தனா்.போடியில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அருகே திங்கள்கிழமை கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி வேளாளா் தெருவைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (32). இவரது மனைவி கெளசல்யா (27). ... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 26) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் து... மேலும் பார்க்க

பாஜக பிரமுகரிடம் வழிப்பறி: இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் பாஜக பிரமுகரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கம்பம், தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்தவா் திருமால் (48). முன்னாள் பாஜக நகரத் தலைவரான இவா், ஞாயிற்ற... மேலும் பார்க்க