செய்திகள் :

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் அளிக்கப்பட்டதன்பேரில், அப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் போச்கோ சட்டப் பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் தாஞ்சூரைச் சோ்ந்த பெருமாள் (58).

இவா், அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, 7 மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வசந்தகுமாா் அரிமளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

புகாரைத் தொடா்ந்து, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பெருமாளை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெஞ்சுவலி இருப்பதாக அவா் தெரிவித்ததை அடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு வழங்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, பெருமாளை போலீஸாா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் மாலையில் ஆஜா்படுத்தினா்.

அவரை வரும் மாா்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி (பொ) ஏ.கே. பாபுலால் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, உதவித் தலைமை ஆசிரியா் பெருமாள் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க