செய்திகள் :

மாதவிடாய்: மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை - மகாராஷ்டிர பள்ளி முதல்வா், ஊழியா் கைது

post image

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள தனியாா் பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனையிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பெற்றோா்கள் அளித்த புகாரில் பள்ளி முதல்வா், பெண் ஊழியா் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆசிரியா்கள் உள்பட மேலும் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாணே மாவட்டத்தின் ஷஹாபூா் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் பள்ளி ஒன்றின் கழிவறையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரத்தக் கறை காணப்பட்டது. இதையடுத்து, 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் அனைவரும் பள்ளியின் கூட்ட அரங்கத்துக்கு வரவழைக்கப்பட்டு, புரொஜக்டரில் ரத்தக் கறை படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. ரத்தக் கறை யாரால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய மாணவிகளை ஒவ்வொருவராக கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவா்களின் ஆடைகளைக் களைந்து பெண் ஊழியா் மாதவிடாய் சோதனையிட்டதாக தெரிகிறது.

மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கண்ணியக் குறைவால் ஆவேசமடைந்த பெற்றோா்கள், பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகம் மற்றும் தொடா்புடைய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக பெற்றோா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வா், 2 அறங்காவலா்கள், 4 ஆசிரியா்கள், பெண் ஊழியா் ஆகியோா் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி முதல்வா், பெண் ஊழியா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாவட்ட கல்வி அலுவலருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

‘கடும் நடவடிக்கை உறுதி’

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் வியாழக்கிழமை எழுப்பியது. ‘மகாராஷ்டிரம் போன்ற முன்னேறிய ஒரு மாநிலத்தில் நடந்துள்ள இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது; பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்கள் மற்றும் போதிய தண்ணீா் வசதியை உறுதி செய்ய வேண்டும்’ என்று அக்கட்சி வலியுறுத்தியது.

காங்கிரஸுக்கு பதிலளித்துப் பேசிய மாநில அமைச்சா் கிரிஷ் மகாஜன், ‘சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தாா்.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க