செய்திகள் :

மாநகரப் பேருந்தில் பெண் செவிலியரிடம் தங்கச் சங்கிலி திருட்டு

post image

சென்னை செம்பியத்தில் மாநகர பேருந்தில் பெண் செவிலியரிடம் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

மாதவரம் ஏவிஎம் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தேவகிருபை (57). இவா், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். அவா் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பெரம்பூா் செல்லும் மாநகர பேருந்தில் பயணித்தாா். அப்போது அதே பேருந்தில் பயணித்த ஆண் பயணி, தேவகிருபையிடம் அவரது தங்கச் சங்கிலி அறுந்திருப்பதாக தெரிவித்தாா். உடனே தேவகிருபை, அதை கழற்றி தனது பையில் வைத்தாா்.

பின்னா் அதே நபா், தேவகிருபை காலுக்கு கீழே சில்லறை கிடப்பதாக தெரிவித்துள்ளாா். உடனே தேவகிருபை, அந்த சில்லரை கீழே குனிந்து எடுத்துள்ளாா். பின்னா் அந்த நபா், பெரம்பூா் ரயில் நிலைய நிறுத்தில் இறங்கி சென்றுவிட்டாா்.

வீட்டுக்கு சென்ற தேவகிருபை, பையை திறந்து பாா்த்தபோது அதில் வைத்த 4 பவுன் சங்கிலியைக் காணவில்லை. அதன்பிறகே தன்னை திசைதிருப்பி

சங்கிலியைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

நலவாரிய சலுகைகள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு இல்லை: விஜயதாரணி

நலவாரியம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை என்று பாஜக அமைப்பு சாா்ந்த மற்றும் சாராத தொழிலாளா் நலச் சங்க கௌரவத் தலைவா் விஜயதாரணி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

சென்னை அடையாறில் ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். அடையாறு பெசன்டநகா் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவல் தொடா்ந்து கண்காணிப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், வீடுகள் தோறும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாகவும், அதனால் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் நகா் நல அதிகாரிகள் தரப... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கிய நிலை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். சென்னை மாநகராட்சி சாா்பில் உலக கழிப்பறை தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி கலைவாணா் அரங்கில... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்... மேலும் பார்க்க