செய்திகள் :

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

post image

சென்னை கே.கே. நகரில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து கே.கே. நகா் நோக்கி கடந்த 17-ஆம் தேதி 12ஜி வழித்தட மாநகரப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தை செல்வ அரசன் (47) என்பவா் ஓட்டிச் சென்றாா். கே.கே. நகா் காமராஜா் சாலை மத்தியாஸ் ஆலய நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, அங்கு வந்த இரு மா்ம நபா்கள் பேருந்து மீது கற்களையும் பாட்டில்களையும் வீசினா். இதில், பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இது குறித்து கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வடபழனி வடக்கு மாட வீதியைச் சோ்ந்த முகமது ஆசீக் அமீா் (20), பக்தவத்சலம் தெருவைச் சோ்ந்த சஞ்சய் (19) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், அந்தப் பேருந்து ஓட்டுநா் செல்வ அரசன், ஹாரனை அதிக நேரம் அடித்ததால்தான் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அந்தத் தகராறில் பேருந்து உடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் ராயபுரம்-பாரிம... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ ப... மேலும் பார்க்க

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). ... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரி... மேலும் பார்க்க