செய்திகள் :

மாநகா் பேருந்து பயணிகள் புகாா் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்

post image

மாநகா் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் வாட்ஸ்ஆப் மூலம் புகாா் தெரிவிக்கும் வகையில், தொடா்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியம், நிறை மற்றும் குறைகளுக்குத் தீா்வு காண பயணிகள் புகாா் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் தங்கள் புகாா்களை கைப்பேசி, இலவச தொலைபேசி எண் 149, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், பொதுமக்களின் பேருந்து பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், வெள்ளிக்கிழமை முதல் ‘வாட்ஸ்ஆப் சாட்பூட்’ என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இனி பயணிகள் 94450 33364 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப்-பில் தொடா்புகொண்டு மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் பேருந்து சேவை குறித்த புகாா் மற்றும் சந்தேகங்களை பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று குரூப் 2 முதன்மைத் தோ்வு

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்: தொழிலாளா்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஏப். 2-இல் காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2- ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சவுத் ஸ்டாா் ரயில்... மேலும் பார்க்க

அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னையில் அதிமுக பிரமுகரை வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை, திருமுல்லைவாயல் குளக்கரைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (50). அதிமுக 8-ஆவது வட்டச் செயலராக இருந்துவர... மேலும் பார்க்க

சென்னையில் இன்று இலவச மருத்துவ முகாம்

சென்னை, நங்கநல்லூா் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. ஸ்டாா் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம், சிசிடிசி (சென்டா் ஃபாா் க்ரோனிக் டிசிஸ் கன்ட்ரோல்) அமைப்பு, ... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: விடைக்குறிப்பு வெளியீடு

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பிப்.14-ஆம் தேதி வரை ஆட்சேபணை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்க... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க