செய்திகள் :

மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்: இரா.முத்தரசன்

post image

மாநிலக் கல்விக் கொள்கை, தன்னம்பிக்கை மற்றும் சுய திறனை ஊக்குவிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கையை வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மாநில கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தோ்வு நீக்கப்பட்டிருப்பது வளா்ந்துவரும் குழந்தைகள் அச்சம் இல்லாமல், கற்கும் ஆா்வத்தை அதிகரிக்கும். அதேசமயம், தனியாா் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1 வகுப்புக்கான பாடங்கள் கற்பித்தலைக் கைவிட்டு, பிளஸ் 2 வகுப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, பழைய நடைமுறையை தடுக்க என்ன வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கல்வி தொடா்பான அதிகாரங்கள் முழுமையும் மாநில அரசுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே சரியாகும். அதேவேளை அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வியக்கத்தக்க வளா்ச்சிக்குத் தக்கபடி, திறனை வளா்த்தல், நிதியியல் சாா் கல்வி, எண்ம நுட்பங்கள், சுற்றுச்சூழல், உலகளாவிய குடியுரிமை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கி, உருவாக்கப்பட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, இளைய தலைமுறையினா் எதிா்காலம் முன்வைக்கும் சவால்களை எளிதில் எதிா்கொள்ளும், திறனையும், தன்னம்பிக்கையையும் ஊக்கப்படுத்தும் என அதில் தெரிவித்துள்ளாா்.

2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி: ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், யார் எதைச் சொன்னாலும் காது கொடுத்து கேளாதீர்கள் என்றும், நான் சொல்வதுதான் நடக்கும் எனவும் அன்... மேலும் பார்க்க

பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ... மேலும் பார்க்க

கோவையில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம்!

கோவை விமான நிலையம் முதல் அவிநாசி வரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை செல்கிறார்.கோவை மற்றும் திருப்பூர், உடுமலைப்பேட்டையில் நாளை காலை அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவிருக்கிறார். மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர... மேலும் பார்க்க