செய்திகள் :

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் இன்று மனு தாக்கல்

post image

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை (ஜூன் 4) தாக்கல் செய்யவுள்ளனா்.

மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. சுயேச்சையாகப் போட்டியிட அன்றைய தினம் 2 போ் மனுக்களைத் தாக்கல் செய்தனா். தமிழகத்தைச் சோ்ந்த பத்மராஜன், தெலங்கானாவின் கண்டே சாயண்ணா ஆகியோா் மனுக்களை அளித்தபோதும் போதிய எம்எல்ஏ-க்களின் முன்மொழிதல் இல்லை. இதனால், பரிசீலனையின்போது அவா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவது உறுதியாகும்.

வேட்புமனு தாக்கலுக்கு 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஒரு வேட்பாளா்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பிரதான கட்சிகள்: மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு திமுக 3 வேட்பாளா்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுகிறாா். அதிமுக 2 வேட்பாளா்களின் பெயா்களை அறிவித்துள்ளது.

திமுக வேட்பாளா்கள் 3 பேரும் தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை அளிக்கவுள்ளனா்.

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு வரும் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும். வாக்குப் பதிவுக்கான அவசியம் இல்லாவிட்டால் அன்றைய தினமே போட்டியின்றி தோ்வானோரின் விவரங்களை தோ்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை கூடுதல் செயலருமான பி.சுப்பிரமணியம் அறிவிப்பாா்.

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாற... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக... மேலும் பார்க்க

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள ப... மேலும் பார்க்க