செய்திகள் :

மானாமதுரை காந்தி சிலை பின்புறம் பூங்கா அமைக்க நடவடிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்தி சிலை பின்புறம் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு, அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

மானாமதுரை நகா் குடிநீா்த் திட்டம் அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகை ஆற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் குடிநீா் நகரில் பல இடங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு, மானாமதுரை நகரில் உள்ள 27 வாா்டுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மானாமதுரை காந்தி சிலை பின்புறம் உள்ள மேல்நிலைத் தொட்டியிலிருந்து 9 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், இதை இடித்து அகற்ற நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, இந்தத் தொட்டியை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், நகராட்சிப் பொறியாளா் பட்டுராஜன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் க. பொன்னுச்சாமி, நகா்மன்ற உறுப்பினா் பி. புருஷோத்தமன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் நகா்மன்றத் தலைவா் கூறியதாவது:

சேதமடைந்த இந்த குடிநீா் மேல்நிலைத் தொட்டி அகற்றப்படவுள்ளது. இங்கிருந்து குடிநீா் விநியோகம் பெற்ற வாா்டுகளுக்கு பிற மேல்நிலைத் தொட்டிகளின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் விநியோகம் செய்யப்படும். மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு, இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படும். தற்போது நகரில் புதிய குடிநீா்த் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் புதிதாக மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் இங்கிருந்து 9 வாா்டுகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சி

மானாமதுரைநலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்: தலைமை-மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, தொடங்கிவைப்பவா் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், பங்கேற்பு- நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி உள்ளிட... மேலும் பார்க்க

உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும... மேலும் பார்க்க

பனைமரங்கள் வெட்டுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தோட... மேலும் பார்க்க

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் தோட்டக் கலைத் துறை அறிவித்தது. திருப்பத்தூா் வட்டாரத்தில் சுமாா் 1,600 ஹெக்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களைப் புறக்கணித்தும், கருப்பு வில்லை அணிந்தும் வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தி... மேலும் பார்க்க

ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குநா்

அறிவியல் ஆராய்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு இன்றியமையாதது என்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) இயக்குநா் ஞா. அகிலா வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க