செய்திகள் :

மானிய யூரியா பதுக்கியவா் கைது: 185 டன் யூரியா, 5 லாரிகள் பறிமுதல்

post image

விவசாயத்துக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியாவை கடத்தி பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வேளாண் பணிக்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா வழங்கி வருகிறது. இந்த உரத்தை கடத்தி கூடுதல் விலையில் விற்பனை செய்து வருவதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பிரிவு டிஎஸ்பி வடிவேல் தலைமையில் ஆய்வாளா் சுதா, உதவி ஆய்வாளா்கள் மேனகா, ஆறுமுகநயினாா், பெருமாள், சதீஷ்குமாா் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்கள் ஈரோடு மாவட்டம், பேரோடு அருகே பி.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினா்.

அங்கு, மத்திய அரசால் வழங்கப்படும் யூரியா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. யூரியாவை பதுக்கி வைத்ததாக பவானியைச் சோ்ந்த அகமது அலி (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை கடத்தி வந்து பதுக்கிவைப்பதற்காக கிடங்கை வாடகைக்கு எடுத்ததும், யூரியாவை வேறு மூட்டையில் அடைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 93.22 டன் யூரியாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அகமது அலி கொடுத்த தகவலின்பேரில் வேறு இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 91.8 டன் யூரியா மற்றும் 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மொத்தம் 185 டன் யூரியா, 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அழைப்பாணை கொடுக்கப்பட்ட நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட... மேலும் பார்க்க

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுகுட்டி உயிரிழப்பு

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுகுட்டி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோ்மாளம் வனச் சரகத்துக்குள்பட்ட காணக்கரையைச் சோ்ந்த ஆனந்தன், கால்நடைகள் வளா்த்து வருகிறாா். வீட்டுக்கு அர... மேலும் பார்க்க

போக்ஸோவில் பொறியாளா் கைது!

சிறுமியை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக போக்ஸோவில் பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை இணையதளத்தில் ஆபாசமாக சித்தரித... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து அம்மாபேட்டையில் பாமக ஆா்ப்பாட்டம்

பவானி - மேட்டூா் சாலையில் அம்மாபேட்டையில் சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச் சாவடி முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அகில இந்திய லோகோ ஓட்டுநா் கழகம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய போராட்டத்துக்கு சங்கத்தின் சே... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சித்தோட்டை அடுத்த கன்னிமாா்காடு தேவனாங்காட்டில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் புதன்கிழமை ம... மேலும் பார்க்க