செய்திகள் :

மான்கள் வேட்டை - விஐபிகளுக்கு விருந்து வைத்தார்களா? - திமுக நிர்வாகியை தீவிரமாக தேடும் வனத்துறை

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புள்ளிமான் வேட்டை வழக்கில், திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ். முகேஷை வனத்துறையினர், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் முகேஷ், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேட்டைக்காரர்களை வரவழைத்து, ஆலங்குளம் வனச்சரகத்திற்குட்பட்ட உத்துமலை மேற்குப் பகுதியில் புள்ளிமான்களை வேட்டையாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள்

இந்த வழக்கில் முகேஷ் கைது செய்யப்பட்டால் மட்டுமே, வேட்டையாடப்பட்ட மான்களின் உண்மையான எண்ணிக்கை, சமைக்கப்பட்டது மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

ஆலங்குளம் வனச்சரக அலுவலர் டி.முனிரத்தினம் தலைமையிலான வனத்துறையினர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பொன் ஆனந்த் (46), டி.ராஜலிங்கம் (40) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இ.ரஞ்சித் சிங் ராஜா (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து, இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.

தேடப்படும் முகேஷ்

இந்த மூவரும், முகேஷ்தான் தங்களை மான் வேட்டைக்காக உத்துமலைக்கு அழைத்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், முகேஷ் தொடர்ச்சியாக வேட்டையில் ஈடுபடுபவராக இருக்கலாம் என்றும், சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான துப்பாக்கிகளுடன் காணப்படும் அவரது படங்களில் உள்ள துப்பாக்கிகள் இந்த வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பதிப்புரிமை மீறல்: ரூ.12,500 கோடி இழப்பீடு வழங்க, AI நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆந்த்ரோபிக் நிறுவனம்ஆந்த்ரோபிக் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கில் 1.5 பில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புக்கொண்டதுகணினி மென்பொருள் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), எழுத்தாளர்களின் பதிப்புரிமை மீறல் வழக... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசப் பெண்களை அச்சுறுத்தும் நிர்வாண கேங்க்: ட்ரோன்கள் மூலம் தேடும் போலீஸார்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள தெளரலா என்ற கிராமத்துப் பெண்கள் இப்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர். தனியாகச் செல்லும் பெண்கள் முன்பு திடீரெனத் தோன்றும் நிர்வாண கேங்க் அவர்களை ஆளில்லாத இடத்தி... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது - பின்னணி என்ன?

4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது தங்க நகைகள் திருடப்பட்டதாக க... மேலும் பார்க்க

தெலங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் ரூ.12,000 கோடி போதைபொருள் பறிமுதல்; மும்பை போலீஸார் அதிரடி!

மும்பையில் ஒரு வகை போதைப்பொருள் அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. மும்பை பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஆண்டு இப்போதைப்பொருள் மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகள... மேலும் பார்க்க

சாத்தூர்: 10-ம் வகுப்பு மாணவி இளைஞருடன் தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரத்தில் விபரீதம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சிலை கரைப்புக்கு 25,000 போலீஸார் பாதுகாப்பு; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமரு... மேலும் பார்க்க