செய்திகள் :

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

post image

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 அன்று காலை ஒரு பாலிதீன் பையில் ஒரு கையின் பாகம் கிடைத்தது. மேலும் அதைத்தொடர்ந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு பையில் இன்னொரு கையும், இன்னும் சில கி.மீ. தூரத்தில் கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து தலை மற்றும் உடலின் மற்ற பாகங்களும் சிக்கியது.

பாகங்கள் அடிப்படையில் இறந்தது ஒரு பெண் என தெரிய வந்தது. அவரை மொத்தம் 19 துண்டுகளாக கூறு போட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கொரட்டகெரே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ஆக. 3ம் தேதி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன பெல்லாவியை சேர்ந்த லட்சுமி தேவி என்பது தெரிய வந்தது. அவரை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றதை அவரது கணவர் ஏற்க மறுத்தார். இறுதியாகக் கொலையானது லட்சுமி தேவி என்பதை போலீஸார் உறுதிசெய்தனர்.

கொலை நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் செய்த ஆய்வில், கடந்த 6ஆம் தேதி உடல் உறுப்புகள் கிடைத்த இடத்திற்கு ஒரு கார் வந்ததும், அந்த காரின் பதிவெண் மூலமாக உரிமையாளரைக் கைது செய்து விசாரித்தபோது இந்த சம்பவத்தில் மூவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதில் முக்கிய குற்றவாளியாக லட்சுமி தேவியின் மருமகன் ராமச்சந்திரா, தன் நண்பருடன் சேர்ந்து மாமியாரைத் துண்டுகளாக்கியுள்ளார். இவர் ஒரு பல் மருத்துவராவார். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில் 47 வயதான ராமச்சந்திரா தன்னை விட 20 வயது இளையவரான லட்சுமி தேவியின் மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த தம்பதியருக்கு 3 வயது மகள் உள்ளது. லட்சுமி தேவியின் குணாதிசயத்தில் பல் மருத்துவருக்குச் சந்தேகம் எழுந்தது.

தனது மனைவியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுவார் என்று சந்தேகத்தின்பேரின், வீட்டிற்கு வந்த மாமியாரை திட்டம்போட்டு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொன்று துண்டுகளாக்கியுள்ளார் ராமச்சந்திரா. இந்த சம்பவம் தொடர்பாக மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Lakshmi Devi murder Tumakuru doctor feared his mother-in-law was forcing her daughter into flesh trade

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைம... மேலும் பார்க்க

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 79.7 பில்லியன் டாலராக உள்ளது. பங்குச்சந்தையி... மேலும் பார்க்க

திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனைக்குப் ப... மேலும் பார்க்க

மூக்கு துவாரம் வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்

சண்டிகர்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துவாரம் வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ... மேலும் பார்க்க

2017-க்குப் பின்... சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!

கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்தது.காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும... மேலும் பார்க்க