செய்திகள் :

மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்

post image

மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் மாம்பலம் ரயில் நிலையம் ரூ. 14.7 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் முக்கிய வணிக இடமாக விளங்கும் தியாகராய நகரில் அமைந்துள்ள மாம்பலம் ரயில் நிலையம் நாளொன்றுக்கு 200 மின்சார ரயில்கள், 90 விரைவு ரயில்கள், 32,000 பயணிகளைக் கையாளுகிறது.

தென் மாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணியை தெற்கு ரயல்வே கடந்த ஆண்டு தொடங்கியது.

தற்போது முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இந்த மாதத்துக்குள் மீதமுள்ள பணியும் நிறைவடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

மாம்பலம் ரயில் நிலையத்தின் இருபுறமும் நெரிசலான பகுதி என்பதால் பயணிகள் வந்து செல்வதில் அதிக சிரமம் இருந்து வந்தது. இந்த நிலையில், ரயில் நிலையத்தின் இருபுறமும் விரிவாக்கப்பட்டு பயணிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பு வசதியை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் வந்து செல்லும் வகையில் நடைமேடை புதுப்பிக்கப்பட்டு பயணிகளுக்கான கூடுதல் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மர... மேலும் பார்க்க

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க