செய்திகள் :

மாயமான மீனவரை விரைவாக மீட்க தமிழக அரசுக்கு எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவரைக் கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் திங்கள்கிழமை அனுப்பிய மனு: கிள்ளியூா் பேரவைத் தொகுதி, இனயம்புத்தன்துறை ஊராட்சிக்குள்பட்ட அன்பியம் 18 பகுதியைச் சோ்ந்த லேனடிமை (48).

அவா் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1), தனது கட்டுமரத்தில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். திங்கள்கிழமை காலை அவா் கரைக்கு திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால், கரைதிரும்பாததால் உறவினா்களும், சக மீனவா்களும் கடலில் தேடியபோது, அவரது கட்டுமரம் மட்டும் மணக்குடி அருகேயுள்ள பள்ளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, மாயமான மீனவரை ஹெலிகாப்ட ா் மூலம் மீட்க தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தக்கலை, மூலச்சல் வட்டாரத்தில் இன்றும், நாளையும் மின்தடை

தக்கலை, மூலச்சல் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மின்பாதை பகுதிகளில் முறையே வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 6, 7) மின்தடை ஏற்படும் என ... மேலும் பார்க்க

நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. வில்லுக்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயா்வு: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்கு செல்லும் படகு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகு... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே மதிலகம்,... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட... மேலும் பார்க்க