செய்திகள் :

மாரடைப்பு: மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்; வைரல் வீடியோவில் என்ன நடந்தது?

post image

திடீர் மாரடைப்பு

மகாராஷ்டிராவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வர்ஷா கராட் (20) என்ற மாணவி பராண்டே நகரில் உள்ள ஆர்.ஜி. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையேறி பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசுவதைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிரித்து கைதட்டி ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர். மாணவியும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார்.

மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகம்

அந்நேரம் வர்ஷாவின் பேச்சின் சத்தம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. திடீரென அவர் அப்படியே கீழே விழுந்துவிட்டார்.

அம்மாணவியை உடனே சக மாணவிகள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சோதித்து பார்த்தபோது அவர் இறந்திருந்தார். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவி மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவி பேசியபடி மேடையில் மயங்கி விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது.

இருதய ஆபரேசன்

வர்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இருதய ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஆப்ரேசனுக்கு பிறகு மாணவிக்கு எந்தவித பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மாரடைப்பு | heart attack

திருமண நாளில் மரணம்

இதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் தம்பதி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருந்தபோது வாசிம் சர்வார் என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்து போனார்.

தொழிலதிபரான வாசிம் தனது திருமண நாளையொட்டி மனைவியுடன் நடனத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இறந்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்கூற வேண்டும்?

மனித குல வரலாற்றில் மோசமான இரவுகளில் ஒன்று. அவரை அவர்கள் அறிவார்கள். அவர் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் பிரசங்கம் செய்பவர். மதம் வணிகமானபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, 'கடவுளின் வீட்டை மீட்க வேண்ட... மேலும் பார்க்க

Infant trafficking: மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை எப்படித் தடுக்கிறார்கள்?!

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்த... மேலும் பார்க்க

"தந்தை யார் என்று சொல்லக் கூடாது...” - வாடகை தாயின் வாயை அடைக்க பணம் கொடுக்கிறாரா எலான் மஸ்க்?

உலக பணக்காரரான எலான் மஸ்க், வாடகை தாய் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தனி... மேலும் பார்க்க

UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்க... மேலும் பார்க்க

Scuba Diving: ``நீருக்குள் சந்தித்தோம், அதனால்..'' - நீருக்கடியில் திருமணம் செய்த காதல் தம்பதி!

வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பும் சில மணமக்கள், தங்களது திருமணங்களை தனித்துவமாக நடத்த முற்படுகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ப... மேலும் பார்க்க

தாராவி: `ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள், சட்டவிரோத குடியிருப்பாளர்கள்' - NMDPL அறிவிப்பால் அதிர்ச்சி

தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம்ஆசியாவில் அதிக குடிசையுள்ள பகுதியாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி ந... மேலும் பார்க்க