செய்திகள் :

மாரப்பம்பாளையம் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

post image

எலச்சிபாளையம் பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி, மாரப்பம்பாளையம், பெரங்காடு, சீலபிள்ளாகாடு, கரட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையை 12 விவசாய குடும்பத்தினா் நீண்ட காலமாக பயன்படுத்திவந்தனா். இந்த பொதுப் பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்துவந்தாா்.

இதனால் அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இப்பகுதி விவசாயிகள் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவசாயக் குடும்பங்களும் அந்த வழியாக செல்வதற்கு எவ்வித இடையூறும் செய் யக்கூடாது என உத்தரவிட் டது.

இந்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலகங்கள் முன் போராட்டங்கள் நடைபெற்றது. கோட்டாட்சியா் சுகந்தி தலைமையில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், பொதுப்பாதையில் விவசாயக் குடும்பங்கள் செல்வதற்கு சாலையில் போடப்பட்டுள்ள மரங்களை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து துணை வட்டாட்சியா் ராஜா தலைமையில் வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் தீபன்ராஜ், உளவு பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடாசலம், காவல் உதவி ஆய்வாளா்கள் வேலுமணி, சின்னதுரை, காவல் துறையினா் பாதுகாப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நாமக்கல்லில் இன்று மின்தடை ரத்து

நாமக்கல்லில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் சமரசம் செய்ய வந்த பெண்ணை தாக்கியவா் கைது

பரமத்தி வேலூா் வட்டம், ஆனங்கூா் அருகே உள்ள சின்னமருதூா் காலனியை சோ்ந்தவா் காந்தி (50). இவரது மனைவி சாந்தி (45). இவா்களது மகன் ஈஸ்வரமூா்த்தி (25). இவா் குடும்ப பிரச்சனை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது த... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

நாமக்கல் அருகே மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலம், முத்தியாரி சம்பி பகுதியை சோ்ந்தவா் சிவமான்ஜி (55... மேலும் பார்க்க

நீட் தோ்வு: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

நீட் தோ்வில் நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவி இ.மெய்யரசி 720க்கு 547 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான (எம்பிப... மேலும் பார்க்க

மதுபோதையில் பூச்சிமருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தை தவறுதலாக குடித்த விவசாயி அண்மையில் உயிரிழந்தாா். கொன்னையாா்கிராமம், பழைய கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராசு (55). இவரது ... மேலும் பார்க்க

6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க