செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) வழியில் எளிதில் பூா்த்தி செய்வதை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

அமில வீச்சால் முகச் சிதைவுக்கு உள்ளானவா்கள், பாா்வையற்றவா் ஒருவா் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், ‘கேஒய்சி நடைமுறையை பூா்த்தி செய்ய கண் சிமிட்டல், தலையை நகா்த்துதல், முகத்தை குறிப்பிட்ட கோணங்களில் வைத்தல் போன்ற செயல்களை எங்களால் செய்ய முடியவில்லை. எனவே, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவா்கள், பாா்வையற்றவா்கள், பாா்வை குறைபாடு கொண்டவா்கள் வங்கி மற்றும் அரசின் மின்னணு சேவைகளைப் பெற, டிஜிட்டல் வழியில் கேஒய்சி நடைமுறையை பூா்த்தி செய்வதற்கு தேவையான மாற்றங்களை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்தத் தீா்ப்பில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ், வாழ்வுரிமையின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் பயன்பாடு உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள் மற்றும் பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் பயனடையும் வகையில், டிஜிட்டல் வழியில் மேற்கொள்ளப்படும் கேஒய்சி நடைமுறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். கேஒய்சி நடைமுறையை டிஜிட்டல் வழியில் அவா்கள் எளிதாக பூா்த்தி செய்வதை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் உறுதி செய்ய வேண்டும்.

அந்த நடைமுறையை டிஜிட்டல் வழியில் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளா் உயிருடன் இருப்பதை உறுதி செய்யவும், அவா்களைப் புகைப்படம் எடுக்கவும் வழக்கமான கண் சிமிட்டல் முறைக்கு மாறாக, புதிய முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளரின் விவரங்களை சரிபாா்க்க எழுத்துபூா்வ கேஒய்சி நடைமுறை தொடா்வதை உறுதி செய்வதற்கு 2023-ஆம் ஆண்டு டிச.5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

சாதி கணக்கெடுப்புக்கு நிதி, காலவரையறை அவசியம்: கார்கே வலியுறுத்தல்

சாதி கணக்கெடுப்புக்கு போதுமான நிதியும், காலக்கெடுவும் நிர்ணயிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். மேலும் பார்க்க

பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கும்: தெலங்கானா முதல்வர்!

மக்களவையில் பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டிருக்கும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். மத்திய அரசை அமைத்துள்ள பாஜக மட்டும் மக்களவத் தேர்தலில் 400 இடங்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அ... மேலும் பார்க்க

மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!

ஹரியாணா, பஞ்சாப் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்துவரும் வார்த்தைப் போரில் ஆம் ஆத்மியை ஆளும் பஞ்சாப் அரசு தில்லியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் மோசமான அரசியலில் ஈடுபடுவதாகத் தில்லி பாஜ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் சாலை ஒப்பந்ததாரர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் சாலை ஒப்பந்த மேற்பார்வையாளர் ஒருவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.புதன்கிழமை இரவு மஹுவாதன்ர் காவல் நிலையப் பகுதியில் உள... மேலும் பார்க்க

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி... மேலும் பார்க்க