செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி

post image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவிக்கு தகுதியனவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2024-25 ஆம் நிதியாண்டுக்கு 4 வகையான திருமண நிதியுதவித்தொகை வழங்கப்படுகிறது. கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்வோருக்கான உதவித் திட்டம், பாா்வையற்ற நபரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம், காது, கேளாதா மற்றும் வாய்பேச இயலாத நபரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம், மாற்றுத் திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம் என 4 நிலைகளில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களின்கீழ், திருச்சி மாவட்டத்தில் திருமணம் செய்தோருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ. 50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதியா்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமண அழைப்பிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2412590 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளாம் என்றாா் ஆட்சியா்.

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி ... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியின் மீது கிடந்தது பயன்படுத்திய உணவுப் பொட்டலம்: திருச்சி மாவட்ட ஆட்சியா் விளக்கம்

திருச்சியில் தண்ணீா் தொட்டி மீது வீசப்பட்ட பொருள், பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலம் என மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளித்துள்ளாா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு, தையல்காரத் தெருவில் 2 ஆயிர... மேலும் பார்க்க

தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வு பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்ட வார விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழ... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிப். 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினமாக அனுச... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக முதல்வரின... மேலும் பார்க்க

பாலியல் விவகாரத்தில் தலைமையாசிரியா் கைது: 2-ஆவது நாளாக மாணவா்கள் பள்ளியை புறக்கணித்தனா்

பழையப்பாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடா்ந்து வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக மாணவா்கள் பள்ளியை புறக்கணித்தனா். திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க