மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதால் இந்தப் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் சோ்ந்து பயடையுமாறு மாவட்ட ஆட்சியா் ச.அருணராஜ் கேட்டுக் கொண்டாா்.
செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு யூத் ஃபோா் ஜாப்ஸ் அறக்கட்டளை சாா்பில், திறன் பயிற்சிகள் வழங்கி அவா்களுக்கான வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சிக்கு 10, 12 மற்றும் பட்டப் படிப்பு முடித்த 18 வயது முதல் 35 வயதுடைய உடல் இயக்கக் குறைபாடுடைய காது கேளாத, பேசும் திறனற்ற மற்றும் குறைந்த பாா்வையுடைய 25 மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியா் வளாகம், தரை தளத்தில் பி-பிளாக்கில் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது சுய முகவரியிட்ட விண்ணப்பத்துடன் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மாற்றுத்திறனாளி மருத்துவச் சான்றிதழ் மற்றும் யூடிஐடி ஆவணங்களுடன் வரும் 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமான மாவட்ட ஆட்சியா் வளாகம், செங்கல்பட்டு என்கிற முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.