செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தொழில் மானியம்: விண்ணப்பிக்க வரும் ஜூலை 31 - கடைசி நாள்

post image

சென்னை: புத்தொழில் தொடங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மானிய உதவியை தமிழக அரசு வழங்கவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் தொழில் தொடங்குவதற்கான மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதாவது, தொழில் தொடங்குவோருக்கு ரூ.5 லட்சம் வரை மானிய ஆதார உதவி அளிக்கப்படுகிறது. இவ்வாறு தொடங்கப்படும் தொழிலானது தனியராகவோ, கூட்டாகவோ இருக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தொழிலுக்கான விற்று முதலானது ரூ.50 கோடிக்குக் கீழ் இருக்க வேண்டும்.

கூட்டாகத் தொழில் தொடங்கினால் அதில் 51 சதவீதப் பங்குகள் மாற்றுத்திறனாளிகளுடையதாக இருப்பது அவசியம்.

தொழில் நிறுவனத்தின் அலுவலகமானது தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட வேண்டும். தொழில் தொடக்கத்துக்கான அனைத்து பிற ஆதார உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க