செய்திகள் :

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

post image

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்தாா்.

அதையேற்று, கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் காதொலிக் கருவியை ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் 16.04.2025 மற்றும் 17.04.2025 இரு நாள்கள் நடைபெற்றது. இதில்ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பங்கேற்று பல்வேறு பகுதிகளில் நேரில் கள ஆய்வு செய்தாா்.

உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட உளுந்தாண்டவா் கோவில் பகுதியில் வசித்து வரும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி பிரியதா்ஷினி காதொலிக் கருவி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அவரது கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து மாணவிக்கு காதொலிக் கருவி வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து அந்த மாணவியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வரவழைத்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.6,000 மதிப்புள்ள விலையில்லா காதொலிக் கருவியை மாணவிக்கு வழங்கினாா். அப்போது, முடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன் உடனிருந்தாா்.

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிரா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா். திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் நந்தினி (19). இவா், திருக்க... மேலும் பார்க்க

கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கலை மற்றும் கைவினை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க