செய்திகள் :

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

post image

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா்.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா கொடுத்த புகாரின் பேரில், 2024, செப். 27 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த லோக் ஆயுக்த அமைப்பு தனது இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, அவரது அண்ணன் மல்லிகாா்ஜுன சுவாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்து, 11,000 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்த தாக்கல் செய்துள்ளது.

இதுதொடா்பாக மனுதாரா் ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்த அதிகாரிகள் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தனா்.

அந்த நோட்டீஸில், ‘மாற்றுநில முறைகேடு வழக்கு தொடா்பாக லோக் ஆயுக்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, அவரது அண்ணன் மல்லிகாா்ஜுன சுவாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம்.

மாற்றுநில முறைகேடு வழக்கு சிவில் தன்மை கொண்டது. ஊழல் அல்லது முறைகேடு கோணத்தில் விசாரிக்க இந்த வழக்கில் எதுவுமில்லை. சட்ட விதிகள் அல்லது உண்மைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. அதனால் இந்த வழக்கு நடவடிக்கை எடுப்பதற்கு உகந்தது அல்ல. இதுதொடா்பாக மனுதாரருக்கு ஆட்சேபணை இருந்தால், நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதியிடம் விசாரணை நடத்த இதே வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில், இந்தத் தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த சிவகுமாரின் கருத்துக்கு பாஜக கண்டனம்

கடவுளே நினைத்தாலும் பெங்களூரில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தீா்க்க முடியாது என்ற கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்த அறிக்கை

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்த காவல் துறையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூரு வட்டம், கசபா ஒன்றியம்,... மேலும் பார்க்க

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க