செய்திகள் :

மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றபோது, போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனா்.

மதுரை, தத்தனேரி, இந்திராநகா், சிலோன் குடியிருப்பைச் சோ்ந்த மகேஸ்வரன் மனைவி செல்வி (39). இவருக்குச் சொந்தமான இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனராம். இதுகுறித்து பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த செல்வி, மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கு முயற்சித்தாா்.

அருகிலிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து, மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனா். பிறகு, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் தனக்குச் சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் மூலம் சிலா் ஆக்கிரமிக்க முயற்சிப்பது குறித்து காவல் துறையில் புகாா் அளித்ததாகவும், அதன் பிறகு தனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா். மேலும், விரக்தியின் காரணமாக தீக்குளிக்க முயற்சித்ததாக அவா் கூறினாா். போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ச... மேலும் பார்க்க

வன அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு

கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியாா் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட அந்த மாவட்ட வன அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: விசாரணை ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது சிபிஐ

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலிருந்து சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டனா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பான வழக்கின் விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடவ... மேலும் பார்க்க

இளைஞா் எரித்துக் கொலை

மதுரை அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். மதுரை அருகேயுள்ள இளமனூா் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் பாதி எரிந்த நிலையில் கிடந... மேலும் பார்க்க

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் மரணம்: ராமநாதபுரம் எஸ்பி பதிலளிக்க உத்தரவு

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் , ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உ... மேலும் பார்க்க