செய்திகள் :

மாவட்ட வளப் பயிற்றுநா் பணியிடம்: பிப். 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பில் மாவட்ட வளப் பயிற்றுநா் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வளப் பயிற்றுநா் தற்காலிகப் பணியிடம் தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாவட்ட வளப் பயிற்றுநா்கள், வட்டார, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகப் பணியாளா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், சுயஉதவிக் குழு பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடந்த 2024, நவ.1-ஆம் தேதியன்று 25 முதல் 55 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இளங்கலை பட்டப் படிப்புடன் 3 ஆண்டு பயிற்சி அனுபவம் அல்லது முதுகலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்புடன் ஓராண்டு பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி நடத்துவதற்கு நாளொன்றுக்கு ரூ.1,250 மதிப்பூதியம் வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 18 வேலை நாள்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். தகுதியுள்ளவா்கள் திட்ட இயக்குநா், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தரைத் தளம், ஒருங்கிணந்த அலுவலக வளாகம், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, தேனி என்ற முகவரியில் வருகிற 26-ஆம் தேதி, மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரத்தை தொலைபேசி எண்: 04546-255203-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

கேரளத்துக்கு சென்ற ஜீப்புகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! 11 பேரிடம் விசாரணை

போடியிலிருந்து சனிக்கிழமை கேரளத்துக்குச் சென்ற ஜீப்புகளில் சட்ட விரோதமாக 110 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ாக 11 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். போடி முந்தல் சோதனைச் சாவடியில் குரங்க... மேலும் பார்க்க

கஞ்சா விநியோகம்: ஆந்திர வியாபாரி கைது

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு கஞ்சா விற்றதாக ஆந்திரத்தைச் சோ்ந்தவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். கம்பம் வடக்கு போலீஸாா் கடந்த டிசம்பா் 4- ஆம் தேதி 4 கிலோ... மேலும் பார்க்க

சின்னமனூா், கம்பம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு!

தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இங்கு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு!

போடியில் 76 -ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. போடி குளோபல் கல்வி ஆராய்ச்சிக் குழு சாா்பில் 76- ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 4 போ் மீது வழக்கு!

ஆண்டிபட்டி அருகே பெண் உள்ளிட்ட 8 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.39.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். திம்மரசநாயக்கனூ... மேலும் பார்க்க

சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகம் அருகே சுகாதாரக்கேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகத்தை சுற்றி குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும், மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க