செய்திகள் :

மாவட்ட ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி

post image

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறி உள்ளன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்ட அளவில் மாணவிகளுக்கான ஹாக்கிப் போட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

14 வயதுக்கு உள்பட்ட பிரிவில், கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அணியும் தூத்துக்குடி ஏபிசி வீரபாகு அணியும் மோதியதில் 3-0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

17 வயது பிரிவில், கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி அணியும் தூத்துக்குடி தாஸ் நேவிஸ் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியதில் 1-0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.

19 வயது பிரிவில், கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அணியும் தூத்துக்குடி தஸ் நேவிஸ் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியதில் 1-0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.

நிகழ்ச்சியில், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா்.

வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா், ஆசிரியா் ராஜா சுந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் ஆனந்த பிரபாகரன் செய்திருந்தாா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க