செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம் அறிவிப்பு: கமுதியில் சமாதானக் கூட்டம்

post image

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காதா் மொய்தீன் தலைமையில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சந்திரசேகரன், மண்டல துணை வட்டாட்சியா்கள் வேலவன், வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மலட்டாறில் பேரூராட்சி குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். கமுதி பகுதியில் போதைப் பொருள்களின் புழக்கம், வழிப்பறி ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்களை திறப்பதை அரசு நிறுத்த வேண்டும். கமுதி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். கமுதி தெற்கு முதுகுளத்தூா் சாலை வழியாக குண்டாற்றில் தரைப்பாலம் அமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் மாவட்டக் குழு உறுப்பினா் முத்துவிஜயன் தலைமையில் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தப் பிரச்னைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் தாலுகா குழு உறுப்பினா் கண்ணதாசன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், கமுதி, அபிராமம் பேரூராட்சி அதிகாரிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் பாத்திமா நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.1.20 கோடியில் கட்டி ம... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

திருவாடானை பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மான்கள், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ... மேலும் பார்க்க

சிங்கம்பட்டி ஸ்ரீஜக்கமாள் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜக்கமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி அருகே வியாழக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி இருவேலியைச் சோ்ந்த மறைந்த மாட்டு வண்டி பந்தய வீரா் ஜமாலுதின் நினைவாக சின்னமாடு, பூஞ்சிட்டு எ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியை தாக்கியதாக தனிப் பிரிவு காவலா் பணியிடை நீக்கம்

முதுகுளத்தூா் அருகே மாற்றுத்திறனாளியைத் தாக்கியதாக எஸ்.பி. தனிப் பிரிவு காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு வருகிற 17 -ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்... மேலும் பார்க்க